ADDED : செப் 28, 2024 10:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மக்காவ்: மக்காவ் ஓபன் பாட்மின்டன் அரையிறுதியில் இந்தியாவின் திரீசா, காயத்ரி ஜோடி தோல்வியடைந்தது.
மக்காவ் ஓபன் 'சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இத்தொடரின் 'நம்பர்-3' அந்தஸ்து பெற்ற, இந்தியாவின் திரீசா, காயத்ரி ஜோடி, உலகத் தரவரிசையில் 54 வது இடத்திலுள்ள சீனதைபேவின் பெய் ஷான், ஹங் டிஜு ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை 17-21 என இழந்த இந்திய ஜோடி, அடுத்த செட்டை 21-16 என வென்று பதிலடி தந்தது. மூன்றாவது, கடைசி செட்டை இந்திய ஜோடி, 10-21 என மோசமாக இழந்தது. முடிவில் இந்திய ஜோடி 17-21, 21-16, 10-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.