/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
டென்மார்க் வீரர் சாம்பியன்: இந்திய ஓபன் பாட்மின்டனில்
/
டென்மார்க் வீரர் சாம்பியன்: இந்திய ஓபன் பாட்மின்டனில்
டென்மார்க் வீரர் சாம்பியன்: இந்திய ஓபன் பாட்மின்டனில்
டென்மார்க் வீரர் சாம்பியன்: இந்திய ஓபன் பாட்மின்டனில்
ADDED : ஜன 19, 2025 11:25 PM

புதுடில்லி: இந்திய ஓபன் பாட்மின்டனில் டென்மார்க்கின் ஆக்செல்சன் சாம்பியன் ஆனார்.
டில்லியில், இந்திய ஓபன் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பைனலில் டென்மார்க்கின் விக்டர் ஆக்செல்சன், ஹாங்காங்கின் லீ சியூக் யியு மோதினர். முதல் செட்டை 21-16 எனக் கைப்பற்றிய ஆக்செல்சன், 2வது செட்டை 21-8 என வென்றார். முடிவில் ஆக்செல்சன் 21-16, 21-8 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் தென் கொரியாவின் ஆன் சே-யங், தாய்லாந்தின் போர்ன்பவீ சோச்சுவாங் மோதினர். அபாரமாக ஆடிய சே-யங் 21-12, 21-9 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.