/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
வரலாறு படைத்தது இந்தியா: ஆசிய பாட்மின்டனில் 'தங்கம்'
/
வரலாறு படைத்தது இந்தியா: ஆசிய பாட்மின்டனில் 'தங்கம்'
வரலாறு படைத்தது இந்தியா: ஆசிய பாட்மின்டனில் 'தங்கம்'
வரலாறு படைத்தது இந்தியா: ஆசிய பாட்மின்டனில் 'தங்கம்'
ADDED : பிப் 18, 2024 05:13 PM

ஷா ஆலம்: ஆசிய பாட்மின்டனில் சிந்து தலைமையிலான இந்திய பெண்கள் அணி முதன்முறையாக தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தது. பைனலில் 3-2 என தாய்லாந்தை வென்றது.
மலேசியாவில் ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் 5வது சீசன் நடந்தது. இதன் பெண்களுக்கான பைனலில் இந்தியா, தாய்லாந்து அணிகள் மோதின. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, தாய்லாந்தின் சுபனிதா மோதினர். அபாரமாக ஆடிய சிந்து 21-12, 21-12 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
இரட்டையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் திரீசா, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-16, 18-21, 21-16 என தாய்லாந்தின் ரவிந்தா, ஜோங்கோல்பன் ஜோடியை வென்றது.
ஒற்றையர் பிரிவு 2வது போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா 11-21, 14-21 என தாய்லாந்தின் புசானனிடம் வீழ்ந்தார். இரட்டையர் பிரிவு 2வது போட்டியில் இந்தியாவின் பிரியா, ஷ்ருதி மிஷ்ரா ஜோடி 11-21, 19-21 என தாய்லாந்தின் பென்யாபா, நன்டகரன் ஜோடியிடம் தோல்வியடைந்தது. இதனையடுத்து போட்டி 2-2 என சமநிலை வகித்தது.
வெற்றியாளரை தீர்மானிக்கும் ஒற்றையர் பிரிவு 3வது போட்டியில் இந்தியாவின் அன்மோல் கார்ப், தாய்லாந்தின் போர்ன்பிசா மோதினர். ஜப்பானுக்கு எதிரான அரையிறுதியில் வெற்றி தேடித்தந்த அன்மோல் கார்ப் 21-14, 21-9 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மூன்றாவது பதக்கம்
முடிவில் இந்திய பெண்கள் அணி 3-2 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்று ஆசிய பாட்மின்டனில் முதன்முறையாக தங்கத்தை தட்டிச் சென்றது. தவிர இது ஆசிய சாம்பியன்ஷிப் (அணிகள்) வரலாற்றில் இந்தியாவுக்கு கிடைத்த 3வது பதக்கம். ஏற்கனவே இரண்டு முறை (2016, 2020) இந்திய ஆண்கள் அணி வெண்கலம் வென்றிருந்தது.