/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
அரையிறுதியில் இந்திய பெண்கள் * ஆசிய பாட்மின்டனில் முதன் முறையாக...
/
அரையிறுதியில் இந்திய பெண்கள் * ஆசிய பாட்மின்டனில் முதன் முறையாக...
அரையிறுதியில் இந்திய பெண்கள் * ஆசிய பாட்மின்டனில் முதன் முறையாக...
அரையிறுதியில் இந்திய பெண்கள் * ஆசிய பாட்மின்டனில் முதன் முறையாக...
ADDED : பிப் 16, 2024 09:56 PM

ஷா ஆலம்: ஆசிய அணிகளுக்கான பாட்மின்டனில் இந்திய பெண்கள் அணி, முதன் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் 3-0 என ஹாங்காங்கை வீழ்த்தியது.
ஆசிய பாட்மின்டன் அணிகளுக்கான சாம்பியன்ஷிப் தொடரின் ஐந்தாவது சீசன் மலேசியாவில் நடக்கிறது. நேற்று நடந்த பெண்களுக்கான காலிறுதியில் இந்திய அணி, ஹாங்காங்கை சந்தித்தது.
முதல் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் சிந்து, சின் யான் ஹாப்பியை 21-7, 16-21, 21-12 என போராடி வென்றார். இரட்டையர் போட்டியில் அஷ்வினி, தனிஷா ஜோடி 21-10, 21-14 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது. இரண்டாவது ஒற்றையரில் அஷ்மிதா 21-12, 21-13 என சம் ஈயை வீழ்த்தினார்.
முடிவில் இந்திய பெண்கள் அணி 3-0 என வெற்றி பெற்று, ஆசிய அணிகளுக்கான பாட்மின்டனில் முதன் முறையாக அரையிறுதிக்கு முன்னேறி, குறைந்தபட்ச பதக்கத்தை உறுதி செய்தது.
ஆண்கள் அதிர்ச்சி
ஆண்கள் காலிறுதியில் இந்தியா, ஜப்பான் மோதின. முதல் போட்டியில் பிரனாய் 16-21, 24-26 என நிஷிமோட்டோவிடம் தோற்றார். இரட்டையர் போட்டியில் சாத்விக்சாய்ராஜ்-சிராக் ஷெட்டி ஜோடி 21-15, 21-17 என வெற்றி பெற்றது. 2வது ஒற்றையரில் இந்தியாவின் லக்சயா சென் 21-19, 22-20 என வெற்றி பெற, இந்தியா 2-1 என முந்தியது.
ஆனால் இரண்டாவது இரட்டையர் போட்டியில் அர்ஜுன்-துருவ் ஜோடி தோற்றது. கடைசியாக நடந்த மூன்றாவது ஒற்றையரில் ஸ்ரீகாந்த், மெமோட்டோ மோதினர். முதல் செட்டை 21-19 என வென்ற ஸ்ரீகாந்த் அடுத்த செட்டை 9-21 என இழந்தார். 3வது, கடைசி செட்டில் ஒரு கட்டத்தில் 19-12 என முன்னிலையில் இருந்தார். கடைசியில் 20-22 என கோட்டை விட்டு வீழ்ந்தார். முடிவில் இந்தியா 2-3 என தோற்று வெளியேறியது.