/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
காலிறுதியில் லக்சயா: ஆசிய ஜூனியர் பாட்மின்டனில்
/
காலிறுதியில் லக்சயா: ஆசிய ஜூனியர் பாட்மின்டனில்
ADDED : அக் 23, 2025 10:17 PM

செங்டு: ஆசிய ஜூனியர் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் லக்சயா, அன்வி உள்ளிட்டோர் முன்னேறினர்.
சீனாவின் செங்டு நகரில், ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் (15, 17 வயது) தொடர் நடக்கிறது. நேற்று 'ரவுண்டு-16' போட்டிகள் நடந்தன. பெண்கள் ஒற்றையர் (17 வயது) போட்டியில் இந்தியாவின் லக்சயா, தென் கொரியாவின் யுன் சியோ லீ மோதினர். இதில் லக்சயா 21-16, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் திக் ஷா 21-19, 21-15 என சீனதைபேயின் பின் ஹுவான் சியாங்கை வீழ்த்தினார். ஆண்கள் ஒற்றையர் (17 வயது) போட்டியில் இந்தியாவின் ஜாக் ஷேர் சிங் 21-12, 21-17 என மலேசியாவின் வின்சன் சோவை தோற்கடித்தார்.
பெண்கள் ஒற்றையரில் (15 வயது) இந்தியாவின் ஷைனா 21-17, 21-16 என சீனாவின் மன் லின் லீயை வென்றார். மற்றொரு போட்டியில் அன்வி ரத்தோர் 21-15, 21-12 என இந்தோனேஷியாவின் கலியா ரஹ்மதானியை தோற்கடித்தார்.
பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் அதிதி, பொன்னம்மா விருத்தி ஜோடி 17-21, 21-15, 21-17 என தென் கொரியாவின் யுன் சியோ லீ, யோ ஜியோங் பார்க் ஜோடியை வென்றது.

