/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
மலேசிய பாட்மின்டன்: சாத்விக்-சிராக் அபாரம்
/
மலேசிய பாட்மின்டன்: சாத்விக்-சிராக் அபாரம்
ADDED : ஜன 10, 2025 09:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பாட்மின்டன் அரையிறுதிக்கு இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி முன்னேறியது.
கோலாலம்பூரில், மலேசிய ஓபன் 'சூப்பர் 1000' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் ஆங் யூ சின், டியோ ஈ யி ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 26-24 என போராடி கைப்பற்றிய இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 21-15 என தன்வசப்படுத்தியது.
மொத்தம் 50 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சாத்விக், சிராக் ஜோடி 26-24, 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.