/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
மாஸ்டர்ஸ் பாட்மின்டன்: சதிஷ் குமார் வெற்றி
/
மாஸ்டர்ஸ் பாட்மின்டன்: சதிஷ் குமார் வெற்றி
ADDED : டிச 04, 2024 09:54 PM

கவுகாத்தி: கவுகாத்தி மாஸ்டர்ஸ் பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் சதிஷ் குமார் வெற்றி பெற்றார்.
அசாமின் கவுகாத்தியில், 'சூப்பர் 100' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சதிஷ் குமார் கருணாகரன், சீனாவின் ஜி ஜுன் வாங் மோதினர். இதில் சதிஷ் குமார் 19-21, 21-16, 21-17 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 21-11, 21-11 என்ற நேர் செட் கணக்கில் சகவீரர் மிதுன் மஞ்சுநாத்தை தோற்கடித்தார். இந்தியாவின் தருண் 13-21, 21-11, 21-7 என சகவீரர் அபினவ் தாகூரை வென்றார். இந்தியாவின் சங்கர் முத்துசாமி 21-10, 21-8 என சகவீரர் அபியான்ஷ் சிங்கை வீழ்த்தினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தன்வி சர்மா, தன்யா ஹேம்நாத் மோதினர். இதில் தன்வி சர்மா 21-18, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் அன்மோல் கார்ப் 21-10, 18-21, 21-18 என சகவீராங்கனை இஷாராணியை வென்றார்.
இந்தியாவின் உன்னாதி ஹூடா 19-21, 14-21 என சகவீராங்கனை ஸ்ரீயான்ஷியிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் தஸ்னிம் மிர் 21-13, 19-21, 24-22 என சகவீராங்கனை இரா சர்மாவை தோற்கடித்தார்.
கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி 22-20, 21-19 என சீன ஜோடியை வீழ்த்தியது. பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா, தனிஷா கிராஸ்டோ ஜோடி வெற்றி பெற்றது.