/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்தியாவை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்: ஆசிய கோப்பையில் அதிர்ச்சி
/
இந்தியாவை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்: ஆசிய கோப்பையில் அதிர்ச்சி
இந்தியாவை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்: ஆசிய கோப்பையில் அதிர்ச்சி
இந்தியாவை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்: ஆசிய கோப்பையில் அதிர்ச்சி
ADDED : அக் 25, 2024 11:09 PM

மஸ்கட்: வளர்ந்து வரும் ஆசிய கோப்பை அரையிறுதியில் இந்திய அணி 20 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
ஓமனில், வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் ('டி-20') 6வது சீசன் நடக்கிறது. மஸ்கட்டில் நடந்த அரையிறுதியில் இந்தியா 'ஏ', ஆப்கானிஸ்தான் 'ஏ' அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த ஆப்கானிஸ்தான் 'ஏ' அணிக்கு ஜுபைத் அக்பரி (64), செடிகுல்லா அடல் (84), கரீம் ஜனத் (41) கைகொடுத்தனர். ஆப்கானிஸ்தான் 'ஏ' அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 206 ரன் எடுத்தது. இந்தியா 'ஏ' சார்பில் ராசிக் சலாம் 3 விக்கெட் வீழ்த்தினார்.
கடின இலக்கை விரட்டிய இந்தியா 'ஏ' அணிக்கு பிரப்சிம்ரன் சிங் (19), அபிஷேகர் சர்மா (7), கேப்டன் திலக் வர்மா (16) ஏமாற்றினர். ஆயுஷ் படோனி (31), நேஹல் வதேரா (20), நிஷாந்த் சிந்து (23) ஓரளவு கைகொடுத்தனர். அபாரமாக ஆடிய ராமன்தீப் சிங், 26 பந்தில் அரைசதம் கடந்தார்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 30 ரன் தேவைப்பட்டன. அப்துல் ரஹ்மான் பந்துவீசினார். இரண்டு பவுண்டரி உட்பட 9 ரன் எடுத்த ராமன்தீப் சிங் (64), கடைசி பந்தில் அவுட்டானார். இந்தியா 'ஏ' அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 186 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்து வெளியேறியது.
இத்தொடரில் முதன்முறையாக பைனலுக்கு முன்னேறிய ஆப்கானிஸ்தான் 'ஏ' அணி வரலாறு படைத்தது. நாளை நடக்கும் பைனலில் ஆப்கானிஸ்தான் 'ஏ', இலங்கை 'ஏ' அணிகள் மோதுகின்றன.