/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
கோப்பை வென்றது வங்கதேசம்: இலங்கை அணி ஏமாற்றம்
/
கோப்பை வென்றது வங்கதேசம்: இலங்கை அணி ஏமாற்றம்
ADDED : மார் 18, 2024 10:52 PM

சாட்டோகிராம்: இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அசத்திய வங்கதேச அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2-1 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.
வங்கதேசம் சென்ற இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. நேற்று சாட்டோகிராமில் மூன்றாவது போட்டி நடந்தது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இலங்கை அணிக்கு கேப்டன் குசால் மெண்டிஸ் (29), சரித் அசலன்கா (37) நிலைக்கவில்லை. ஜனித் லியானகே சதம் விளாசினார். இலங்கை அணி 50 ஓவரில் 235 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஜனித் (101) அவுட்டாகாமல் இருந்தார். வங்கதேசம் சார்பில் டஸ்கின் அகமது 3 விக்கெட் வீழ்த்தினார்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு தன்சித் ஹசன் (84) அரைசதம் கடந்தார். முஷ்பிகுர் ரஹிம், ரிஷாத் ஹொசைன் ஜோடி நம்பிக்கை தந்தது. ஹசரங்கா வீசிய 40வது ஓவரில் வரிசையாக 2 சிக்சர், 3 பவுண்டரி அடித்தார் ரிஷாத். மகேஷ் தீக்சனா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய முஷ்பிகுர் வெற்றியை உறுதி செய்தார்.
வங்கதேச அணி 40.2 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 237 ரன் எடுத்து வெற்றி பெற்றது. முஷ்பிகுர் (37), ரிஷாத் (48) அவுட்டாகாமல் இருந்தனர்.

