sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

சென்னை அணி வெற்றி துவக்கம்: ருதுராஜ், ரச்சின் அரைசதம்

/

சென்னை அணி வெற்றி துவக்கம்: ருதுராஜ், ரச்சின் அரைசதம்

சென்னை அணி வெற்றி துவக்கம்: ருதுராஜ், ரச்சின் அரைசதம்

சென்னை அணி வெற்றி துவக்கம்: ருதுராஜ், ரச்சின் அரைசதம்


ADDED : மார் 23, 2025 11:57 PM

Google News

ADDED : மார் 23, 2025 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கேப்டன் ருதுராஜ், ரச்சின் ரவிந்திரா அரைசதம் கடந்து கைகொடுக்க சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி ஏமாற்றியது.

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் 'பவுலிங்' தேர்வு செய்தார்.

நுார் அசத்தல்: மும்பை அணிக்கு ரோகித் சர்மா (0) ஏமாற்றினார். ரியான் ரிக்கிள்டன் (13), வில் ஜாக்ஸ் (11) சோபிக்கவில்லை. பின் இணைந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஜோடி நிதானமாக விளையாடியது. நான்காவது விக்கெட்டுக்கு 51 ரன் சேர்த்த போது நுார் அகமது 'சுழலில்' சூர்யகுமார் (29) சிக்கினார். தொடர்ந்து அசத்திய நுார் அகமது பந்தில் ராபின் மின்ஸ் (3), திலக் (31), நமன் திர் (17) அவுட்டாகினர். கடைசி நேரத்தில் 2 சிக்சர், 2 பவுண்டரி அடித்து தீபக் சகார் ஓரளவு கைகொடுத்தார். மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன் எடுத்தது. தீபக் (28), சத்யநாராயணா ராஜு (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

ருதுருாஜ் விளாசல்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு ராகுல் திரிபாதி (2) ஏமாற்றினார். பின் இணைந்த ரச்சின் ரவிந்திரா, கேப்டன் ருதுராஜ் ஜோடி கைகொடுத்தது. தீபக் சகார், சான்ட்னர், வில் ஜாக்ஸ் பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்ட ருதுராஜ், 22 பந்தில் அரைசதம் எட்டினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 67 ரன் சேர்த்த போது விக்னேஷ் பந்தில் ருதுருாஜ் (56) அவுட்டானார். தொடர்ந்து அசத்திய விக்னேஷ் 'சுழலில்' ஷிவம் துபே (9), தீபக் ஹூடா (3) சிக்கினர்.

ரச்சின் அபாரம்: மறுமுனையில் அசத்திய ரச்சின், விக்னேஷ் பந்தை சிக்சருக்கு அனுப்பி அரைசதம் கடந்தார். ஆறாவது விக்கெட்டுக்கு 36 ரன் சேர்த்த போது ரவிந்திர ஜடேஜா (17) 'ரன்-அவுட்' ஆனார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 4 ரன் தேவைப்பட்டது. சான்ட்னர் பந்துவீசினார். முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரச்சின், வெற்றி துவக்கத்தை உறுதி செய்தார்.சென்னை அணி 19.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 158 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ரச்சின் (65*), தோனி (0*) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை சென்னையின் நுார் அகமது வென்றார்.

ரோகித் '18'

பிரிமியர் கிரிக்கெட் அரங்கில் அதிக முறை 'டக்-அவுட்' ஆன வீரர்கள் வரிசையில் முதலிடத்தை மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் உடன் பகிர்ந்து கொண்டார் ரோகித். மூவரும் தலா 18 முறை 'டக்' அவுட்டாகினர்.

நுார் அசத்தல்

பிரிமியர் லீக் அரங்கில் மும்பைக்கு எதிராக சிறந்த பந்துவீச்சை (4 ஓவர், 18 ரன், 4 விக்கெட்) பதிவு செய்த சென்னை அணியின் சுழற்பந்துவீச்சாளரானார் நுார் அகமது. இதற்கு முன், ரவிந்திர ஜடேஜா (4 ஓவர், 20 ரன், 3 விக்கெட், 2023, இடம்: மும்பை) இச்சாதனை படைத்திருந்தார்.

* தவிர இது, பிரிமியர் லீக் அரங்கில் நுார் அகமதுவின் சிறந்த பந்துவீச்சானது. இதற்கு முன் 2023ல் குஜராத் அணிக்காக விளையாடிய இவர், மும்பைக்கு எதிராக 37/3 (4 ஓவர்) தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்திருந்தார்.

22 பந்தில்

அபாரமாக ஆடிய சென்னை கேப்டன் ருதுராஜ், பிரிமியர் லீக் அரங்கில் தனது அதிவேக (22 பந்து) அரைசதத்தை பதிவு செய்தார். இதற்கு முன், 2023ல் குஜராத் அணிக்கு எதிராக ஆமதாபாத்தில் நடந்த போட்டியில் 23 பந்தில் அரைசதம் விளாசினார்.

தொடரும் சோகம்

பிரிமியர் லீக் தொடரில் மும்பை அணி, தனது முதல் போட்டியில் தொடர்ந்து 13வது ஆண்டாக (2013-2025) தோல்வியடைந்தது. கடைசியாக 2012ல் மும்பை அணி, தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.

'வீல் சேரில்'...: தோனி நெகிழ்ச்சி

பிரிமியர் போட்டிக்காக சமீபத்தில் சென்னை வந்த 'தல' தோனியின் 'டி-சர்ட்டில்' 'மோர்ஸ் கோடு' ரகசிய மொழியில் 'கடைசியாக ஒரு முறை' என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆண்டுடன் ஓய்வு பெறப் போகிறாரா என்ற சந்தேகம் எழுந்தது.

தோனி 43, கூறுகையில்,''நான் விரும்பும் வரை சென்னை அணிக்காக எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் விளையாடலாம். இது எனது அணி. நான் 'வீல் சேரில்' அமர்ந்திருந்தாலும், என்னை ரசிகர்கள் இழுத்துச் செல்வர்,'' என்றார்.

சென்னை கேப்டன் ருதுராஜ் கூறுகையில்,''தோனி இப்போது அதிகமாக பயிற்சியில் ஈடுபடுவதில்லை. போட்டியில் 'சிக்சர்' விளாசுவதே இவரது இலக்கு. சமீபத்திய மாஸ்டர்ஸ் லீக் தொடரில் 51 வயதில் சச்சின் விளாசினார். எனவே, தோனி இன்னும் பல ஆண்டுகள் விளையாடலாம்,''என்றார்.






      Dinamalar
      Follow us