sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

பாக்., செல்ல இந்தியா மறுப்பு * சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு சிக்கல்

/

பாக்., செல்ல இந்தியா மறுப்பு * சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு சிக்கல்

பாக்., செல்ல இந்தியா மறுப்பு * சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு சிக்கல்

பாக்., செல்ல இந்தியா மறுப்பு * சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு சிக்கல்


ADDED : நவ 08, 2024 11:50 PM

Google News

ADDED : நவ 08, 2024 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக பாகிஸ்தான் செல்ல இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், நான்கு ஆண்டுக்கு ஒருமுறை சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. ஒருநாள் தரவரிசையில் 'டாப்-8' இடத்திலுள்ள அணிகள் மட்டும் பங்கேற்கும். இதில் 2002, 2013ல் சாம்பியன் ஆன இந்தியா, 2017 பைனலில் பாகிஸ்தானிடம் தோற்றது.

தற்போது 8 ஆண்டுக்குப் பின், பாகிஸ்தானில் இத்தொடர் வரும், 2025, பிப். 19-மார்ச் 9ல் நடக்க உள்ளது. ஆனால் 2008ல் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இந்தியா, பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் சென்றதில்லை. 2012-13ல் மட்டும் பாகிஸ்தான் அணி, இந்தியா வந்து, 'டி-20', ஒருநாள் தொடரில் பங்கேற்றது.

மற்றபடி, ஐ.சி.சி., தொடரில் மட்டும் இரு அணிகள் மோதுகின்றன. கடந்த 2023ல் நடந்த ஆசிய கோப்பை தொடருக்காக இந்தியா, பாகிஸ்தான் செல்ல மறுத்தது. இந்தியா பங்கேற்ற போட்டிகள் இலங்கையில் நடந்தன.

புதிய திட்டம்

இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) தரப்பில், புதிய திட்டம் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, 'பாகிஸ்தான் மண்ணில் ஒவ்வொரு போட்டியில் விளையாடிய பின், இந்திய அணி உடனே டில்லி அல்லது சண்டிகர் சென்று விடலாம்,' என தெரிவிக்கப்பட்டது. ஆனால், 'அதிக பயணம் கூடுதல் சுமையாக இருக்கும்,' என, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ஏற்க மறுத்தது.

இடம் மாற்றம்

தற்போது இந்திய அணி, பாகிஸ்தான் செல்லாது என, பி.சி.பி.,யிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில்,' சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க, நாங்கள் பாகிஸ்தான் வர முடியாது. இது தான் எங்கள் முடிவு. இதில் எவ்வித மாற்றமும் இல்லை. எங்களது போட்டிகளை துபாயில் நடத்த வேண்டும்,' என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடர், திட்டமிட்டபடி நடக்குமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us