sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

இம்ரான் கானுக்கு சிகிச்சை * கபில் தேவ், கவாஸ்கர் கோரிக்கை

/

இம்ரான் கானுக்கு சிகிச்சை * கபில் தேவ், கவாஸ்கர் கோரிக்கை

இம்ரான் கானுக்கு சிகிச்சை * கபில் தேவ், கவாஸ்கர் கோரிக்கை

இம்ரான் கானுக்கு சிகிச்சை * கபில் தேவ், கவாஸ்கர் கோரிக்கை

1


ADDED : பிப் 17, 2026 11:10 PM

Google News

1

ADDED : பிப் 17, 2026 11:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: சிறையில் உள்ள இம்ரான் கானுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென கவாஸ்கர், கபில்தேவ் உள்ளிட்ட முன்னாள் கேப்டன்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் இம்ரான் கான் 73. கடந்த 1992ல் இவரது தலைமையான அணி உலக கோப்பை (50 ஓவர்) வென்றது. பின் அரசியலில் ஈடுபட்ட இம்ரான் கான், 2018-2022ல் பாகிஸ்தான் பிரதமராக இருந்தார்.

ஊழல் வழக்கில் சிக்கிய இவருக்கு, 2023ல் 14 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில், 'இவருக்கு போதிய மருத்துவ வசதிகள் செய்து தரப்படவில்லை, வலது கண்ணில் 85 சதவீத பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது,' என செய்தி வெளியாகின.

இந்நிலையில், இந்தியாவின் கபில் தேவ், கவாஸ்கர், ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர், கிரெக் சாப்பல், இங்கிலாந்தின் நாசர் ஹுசைன், வெஸ்ட் இண்டீசின் கிளைவ் லாயிடு, நியூசிலாந்தின் ஜான் ரைட் உள்ளிட்ட 14 முன்னாள் கேப்டன்கள் சேர்ந்து, பாகிஸ்தான் அரசிற்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில்,'இம்ரான் கான் கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டிருப்பது கவலை தருகிறது. அவருடன் இணைந்து விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் என்ற அடிப்படையில் இம்ரான் கான், மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும் விரும்புகிறோம்.

அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை தொடர்ந்து வழங்கப்படுவதை பாகிஸ்தான் அரசு உறுதி செய்ய வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் உட்பட நெருங்கிய உறவுகளை பார்க்க அனுமதிக்க வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us