தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இந்திய 'ஏ' அணியில் ரோகித் * ஆஸி., தொடருக்கு தயாராக...

இந்திய 'ஏ' அணியில் ரோகித் * ஆஸி., தொடருக்கு தயாராக...

இந்திய 'ஏ' அணியில் ரோகித் * ஆஸி., தொடருக்கு தயாராக...


ADDED : ஆக 21, 2025 10:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2025 10:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராகும் வகையில், இந்திய 'ஏ' அணியில் களமிறங்க உள்ளார் ரோகித் சர்மா.

இந்திய ஒருநாள் அணி கேப்டன் ரோகித் சர்மா 38. சர்வதேச 'டி-20', டெஸ்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார். அடுத்து 2027 ல் தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியாவில் நடக்க உள்ள உலக கோப்பை (50 ஓவர்) தொடரில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.

தற்போது பிரிமியர் தொடருக்குப் பின் எவ்வித சர்வதேச போட்டியிலும் பங்கேற்காத இவர், அடுத்த இந்திய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் (அக்டோபர் 19-25) களமிறங்க உள்ளார்.

இதற்கு முன், இந்தியா வரும் ஆஸ்திரேலிய 'ஏ' அணி, இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் (லக்னோ), மூன்று ஒருநாள் போட்டியில் பங்கேற்க உள்ளது. இதில் ஒருநாள் போட்டிகள் கான்பூரில் வரும் செப்டம்பர் 30, அக். 3, 5ல் நடக்க உள்ளது.

இதற்கான இந்திய 'ஏ' அணியில் ரோகித் விளையாட முடிவு செய்துள்ளார். இது ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராக, சிறந்த பயிற்சியாக அமையலாம்.



கடைசி தொடரா

இந்திய ஒருநாள் அணிக்கு புதிய கேப்டன் விரைவில் நியமிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில்,' 38 வயதான ரோகித், 2027 உலக கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டார், வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருடன், ஒருநாள் அரங்கில் இருந்து ஓய்வு பெறுவார். இது அவருக்கு கடைசித் தொடராக இருக்கும்,' என செய்தி வெளியாகின.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us