/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இங்கிலாந்து பவுலர்கள் அபாரம்: இலங்கை அணி தடுமாற்றம்
/
இங்கிலாந்து பவுலர்கள் அபாரம்: இலங்கை அணி தடுமாற்றம்
இங்கிலாந்து பவுலர்கள் அபாரம்: இலங்கை அணி தடுமாற்றம்
இங்கிலாந்து பவுலர்கள் அபாரம்: இலங்கை அணி தடுமாற்றம்
ADDED : செப் 08, 2024 12:32 AM

ஓவல்: இங்கிலாந்து பவுலர்கள் அசத்த, இலங்கை அணி ரன் சேர்க்க முடியாமல் தடுமாறியது.
இங்கிலாந்து, இலங்கை அணிகள் மோதும் 3வது டெஸ்ட் லண்டன், ஓவல் மைதானத்தில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 221/3 ரன் எடுத்திருந்தது. போப் (103), புரூக் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு ஹாரி புரூக் (19), ஜேமி ஸ்மித் (16) நிலைக்கவில்லை. கிறிஸ் வோக்ஸ் (2), அட்கின்சன் (5) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். அபாரமாக ஆடிய கேப்டன் போப், 154 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜோஷ் ஹல் (2), பஷீர் (1) ஏமாற்றினர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 325 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஸ்டோன் (15) அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை சார்பில் மிலன் ரத்னாயகே 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்னே (9), குசால் மெண்டிஸ் (14), மாத்யூஸ் (3), தினேஷ் சண்டிமால் (0) ஏமாற்றினர். பொறுப்பாக ஆடிய பதும் நிசங்கா (64) அரைசதம் கடந்தார். பின் இணைந்த கமிந்து மெண்டிஸ், தனஞ்செயா டி சில்வா அரைசதம் கடந்தனர்.
இலங்கை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 211 ரன் எடுத்திருந்த போது போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. தனஞ்செயா டி சில்வா (64), கமிந்து மெண்டிஸ் (54) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் ஸ்டோன் 2 விக்கெட் வீழ்த்தினார்.