உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 14, 2026 10:57 PM

அ நிறம் | அளவு
துபாய்: மூன்றாவது டெஸ்டில் தாமதமாக பந்துவீசிய பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இங்கிலாந்து சென்ற பாகிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. பர்மிங்காமில் நடந்த 3வது டெஸ்டில் பாகிஸ்தான் அணியினர் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீச தவறினர்.
இப்போட்டியில் 11 ஓவர் தாமதமாக பந்துவீசியதால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் விதிமுறைப்படி புள்ளிப்பட்டியலில் 11 புள்ளி குறைக்கப்பட்டது. இதனையடுத்து புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் அணி 5 புள்ளிகளுடன் (4.63 வெற்றி சதவீதம்) 9வது இடத்துக்கு தள்ளப்பட்டது. தவிர, ஐ.சி.சி., சார்பில் பாகிஸ்தான் வீரர்களுக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
