sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

இந்திய பெண்கள் 'உலக சாம்பியன்': பார்வையற்றோர் 'டி-20' கிரிக்கெட்டில்

/

இந்திய பெண்கள் 'உலக சாம்பியன்': பார்வையற்றோர் 'டி-20' கிரிக்கெட்டில்

இந்திய பெண்கள் 'உலக சாம்பியன்': பார்வையற்றோர் 'டி-20' கிரிக்கெட்டில்

இந்திய பெண்கள் 'உலக சாம்பியன்': பார்வையற்றோர் 'டி-20' கிரிக்கெட்டில்


ADDED : நவ 23, 2025 11:31 PM

Google News

ADDED : நவ 23, 2025 11:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொழும்பு: பார்வையற்றோர் பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில், 7 விக்கெட் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது.

இந்தியா, இலங்கையில், பார்வையற்றோர் பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை முதல் சீசன் நடந்தது. இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்றன.

இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்த பைனலில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் தீபிகா, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

நேபாள அணிக்கு பிமலா ராய் (26), சரிதா கிமிரே (35*) ஆறுதல் தந்தனர். நேபாள அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 114 ரன் எடுத்தது. இந்தியா சார்பில் ஜமுனா ராணி, அனு குமாரி தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கருணா (42), புலா சரேன் (44*) கைகொடுத்தனர். இந்திய அண 12.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 117 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

இத்தொடரில் இந்திய அணி 100 சதவீத வெற்றியுடன் உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஐந்து லீக் போட்டியிலும் வெற்றி பெற்ற இந்தியா, அரையிறுதியில் ஆஸ்திரேலியா, பைனலில் நேபாளத்தை வென்றது.






      Dinamalar
      Follow us