/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
மழையால் போட்டி ரத்து: 'டி-20' தொடர் சமன்
/
மழையால் போட்டி ரத்து: 'டி-20' தொடர் சமன்
ADDED : செப் 15, 2024 11:18 PM

மான்செஸ்டர்: மூன்றாவது 'டி-20' போட்டி மழையால் ரத்தானது. தொடர் 1-1 என சமன் ஆனது.
இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. நேற்று மான்செஸ்டரில் மூன்றாவது, கடைசி 'டி-20' போட்டி நடக்க இருந்தது. ஆனால் கனமழை காரணமாக 'டாஸ்' கூட போடாத நிலையில் போட்டியை ரத்து செய்வதாக அம்பயர்கள் அறிவித்தனர். இதனையடுத்து தொடர் 1-1 என சமன் ஆனதால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் கோப்பையை பகிர்ந்து கொண்டன.
புரூக் கேப்டன்: அடுத்து இவ்விரு அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கின்றன. முதல் போட்டி செப். 19ல் நாட்டிங்காமில் நடக்கிறது. மீதமுள்ள போட்டிகள் லீட்ஸ் (செப். 21), செஸ்டர்-லி-ஸ்டிரீட் (செப். 24), லார்ட்ஸ் (செப். 27), பிரிஸ்டோலில் (செப். 29) நடக்கவுள்ளன. இத்தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து காயம் காரணமாக 'ரெகுலர்' கேப்டன் ஜோஸ் பட்லர் விலகினார். புதிய கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இதுவரை 15 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளார்.