sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

புதிய கேப்டன் ரிஷாப் பன்ட்: ஐ.பி.எல்., லக்னோ அணிக்கு

/

புதிய கேப்டன் ரிஷாப் பன்ட்: ஐ.பி.எல்., லக்னோ அணிக்கு

புதிய கேப்டன் ரிஷாப் பன்ட்: ஐ.பி.எல்., லக்னோ அணிக்கு

புதிய கேப்டன் ரிஷாப் பன்ட்: ஐ.பி.எல்., லக்னோ அணிக்கு


ADDED : ஜன 20, 2025 10:14 PM

Google News

ADDED : ஜன 20, 2025 10:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: ஐ.பி.எல்., லக்னோ அணிக்கு கேப்டனாக ரிஷாப் பன்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல்., 18வது சீசன் வரும் மார்ச்சில் துவங்குகிறது. இதற்கான வீரர்கள் 'மெகா' ஏலத்தில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷாப் பன்ட், அதிகபட்சமாக ரூ. 27 கோடிக்கு லக்னோ அணியில் ஒப்பந்தமானார். நேற்று, லக்னோ அணிக்கு புதிய கேப்டனாக ரிஷாப் பன்ட் 27, நியமிக்கப்பட்டார். ஏற்கனவே இவர், டில்லி அணிக்கு கேப்டனாக செயல்பட்டார்.

ரிஷாப் பன்ட் கூறுகையில், ''லக்னோ அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி. அணியின் வெற்றிக்கு 200 சதவீதம் பங்களிப்பேன். அணியில் திறமையான இளம் வீரர்களுடன், அனுபவ வீரர்கள் இருப்பது பலம். அணியை சிறப்பாக வழிநடத்துவது குறித்து நிறைய கேப்டன், சீனியர் வீரர்களிடம் இருந்து கற்றுக்கொண்டுள்ளேன். ஒரு வீரரை எப்படி கவனித்துக் கொள்வது என்பதை ரோகித் சர்மாவிடம் இருந்து தெரிந்து கொண்டேன். சகவீரர்களுடன் இணைந்து முதன்முறையாக கோப்பை வென்று தர முயற்சிப்பேன்,'' என்றார்.






      Dinamalar
      Follow us