sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

ரபாடா விலகல்: சிக்கலில் குஜராத்

/

ரபாடா விலகல்: சிக்கலில் குஜராத்

ரபாடா விலகல்: சிக்கலில் குஜராத்

ரபாடா விலகல்: சிக்கலில் குஜராத்


ADDED : ஏப் 03, 2025 09:52 PM

Google News

ADDED : ஏப் 03, 2025 09:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பிரிமியர் லீக் தொடரில் இருந்து குஜராத் வீரர் ரபாடா விலகினார்.

இந்தியாவில் நடக்கும் பிரிமியர் லீக் கிரிக்கெட் 18வது சீசனுக்கான குஜராத் அணியில் தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடா (ரூ. 10.75 கோடி) இடம் பெற்றிருந்தார். பஞ்சாப் (1/41), மும்பைக்கு (1/42) எதிராக பெரிய அளவில் சோபிக்காத இவர், பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் களமிறங்கவில்லை. இந்நிலையில் ரபாடா, சொந்த காரணங்களுக்கான இத்தொடரில் இருந்து விலகி, தென் ஆப்ரிக்கா திரும்பினார் என, குஜராத் அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இவருக்கு பதிலாக தென் ஆப்ரிக்காவின் ஜெரால்டு கோட்ஸி அல்லது ஆப்கானிஸ்தான் 'ஆல்-ரவுண்டர்' கரீம் ஜனத் 'லெவன்' அணிக்கு தேர்வு செய்யப்படலாம்.

சமீபத்தில், பிரிமியர் லீக் தொடரில் இடம் பெற்றுள்ள 'இம்பாக்ட்' விதிமுறை குறித்து ரபாடா வெளிட்ட கருத்து சர்ச்சை ஏற்படுத்தியது. 'இம்பாக்ட்' விதிமுறை பேட்டர்களுக்கு சாதகமானது. இதனால் நிறைய சிக்சர், பவுண்டரி விளாசப்படுகிறது. தவிர அதிக ரன் குவிக்கும் வகையில் ஆடுகளம் அமைக்கப்படுகின்றன. எனவே இப்போட்டியை கிரிக்கெட் என்று அழைக்காமல், 'பேட்டிங்' என்று கூறுங்கள் என தெரிவித்திருந்தார்.






      Dinamalar
      Follow us