/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
வெள்ளத்தில் தப்பிய ராதா யாதவ்
/
வெள்ளத்தில் தப்பிய ராதா யாதவ்
ADDED : ஆக 29, 2024 10:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வதோதரா: குஜராத்தின் வதோதராவில் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ராதா யாதவ் 24, சிக்கிக் கொண்டார்.
வரும் அக். 3ல் துவங்கும் (எமிரேட்ஸ்), பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். இவரை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர். இவர் வெளியிட்ட செய்தியில்,' நாங்கள் மோசமான சூழலில் சிக்கிக் கொண்டோம். எங்களை மீட்ட மீட்பு படையினருக்கு நன்றி,' என தெரிவித்துள்ளார்.

