sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

ரஞ்சி: மும்பை பவுலர்கள் ஏமாற்றம்

/

ரஞ்சி: மும்பை பவுலர்கள் ஏமாற்றம்

ரஞ்சி: மும்பை பவுலர்கள் ஏமாற்றம்

ரஞ்சி: மும்பை பவுலர்கள் ஏமாற்றம்


ADDED : பிப் 17, 2025 09:59 PM

Google News

ADDED : பிப் 17, 2025 09:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாக்பூர்: ரஞ்சி கோப்பை அரையிறுதியில் மும்பை அணி பவுலர்கள் ஏமாற்றினர்.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் ரஞ்சி கோப்பை தொடர் நடக்கிறது. நாக்பூரில் துவங்கிய அரையிறுதியில் 'நடப்பு சாம்பியன்' மும்பை, விதர்பா அணிகள் மோதின.

'டாஸ்' வென்று முதல் இன்னிங்சை துவக்கிய விதர்பா அணிக்கு அதர்வா (4) ஏமாற்றினார்.அபாரமாக ஆடிய துருவ் ஷோரே (74), டேனிஷ் (79) அரைசதம் கடந்தனர். கருண் நாயர் (45) ஓரளவு கைகொடுத்தார். மும்பை அணி பவுலர்கள் திணறினர். ஆட்டநேர முடிவில் விதர்பா அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 308 ரன் எடுத்திருந்தது. யாஷ் ரத்தோட் (47), கேப்டன் அக்சய் வாட்கர் (13) அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை அணி சார்பில் ஷிவம் துபே, ஷாம்ஸ் முலானி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

சச்சின் அரைசதம்

ஆமதாபாத்தில் நடக்கும் மற்றொரு அரையிறுதியில் கேரளா, குஜராத் அணிகள் விளையாடுகின்றன. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த கேரளா அணிக்கு அக்சய் (30), ரோகன் (30), ஜலஜ் சக்சேனா (30) கைகொடுத்தனர். பொறுப்பாக ஆடிய கேப்டன் சச்சின் பேபி அரைசதம் கடந்தார். ஆட்டநேர முடிவில் கேரளா அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 206 ரன் எடுத்திருந்தது. சச்சின் (69), முகமது அசார் (30) அவுட்டாகாமல் இருந்தனர்.








      Dinamalar
      Follow us