/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ரோகித் 'நம்பர்-2': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
/
ரோகித் 'நம்பர்-2': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
ரோகித் 'நம்பர்-2': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
ரோகித் 'நம்பர்-2': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
ADDED : ஆக 14, 2024 10:18 PM

துபாய்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்தியாவின் ரோகித் சர்மா 2வது இடத்துக்கு முன்னேறினார்.
ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, 765 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்து 'நம்பர்-2' இடத்துக்கு முன்னேறினார். சமீபத்தில் முடிந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில், 2 அரைசதம் உட்பட 157 ரன் (சராசரி 52.33) எடுத்தார். இத்தொடரில் 57 ரன் எடுத்து ஏமாற்றிய இந்திய துவக்க வீரர் சுப்மன் கில் (763 புள்ளி) 2வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
மற்றொரு இந்திய வீரர் விராத் கோலி 4வது இடத்தை (தலா 746 புள்ளி) அயர்லாந்தின் டெக்டருடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் குல்தீப் யாதவ் (665 புள்ளி, 4வது இடம்), பும்ரா (645 புள்ளி, 8வது இடம்) 'டாப்-10' வரிசையில் நீடிக்கின்றனர். இலங்கை தொடரில் 'வேகத்தில்' ஏமாற்றிய (3 விக்கெட்) இந்தியாவின் முகமது சிராஜ் (643 புள்ளி) 5 இடம் பின்தள்ளப்பட்டு 9வது இடத்தை நியூசிலாந்தின் பவுல்ட் உடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இத்தொடரில் இந்தியா சார்பில் அதிக விக்கெட் (5) சாய்த்த தமிழக 'ஆல்-ரவுண்டர்' வாஷிங்டன் சுந்தர் (411 புள்ளி) 10 இடம் முன்னேறி 87வது இடத்தை கைப்பற்றினார். இந்தியாவின் முகமது ஷமி 12வது இடத்தில் நீடிக்கிறார்.