/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ரோகித் சர்மா 'நம்பர்-5': ஐ.சி.சி., தரவரிசையில்
/
ரோகித் சர்மா 'நம்பர்-5': ஐ.சி.சி., தரவரிசையில்
ADDED : மார் 05, 2025 10:08 PM

துபாய்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்தியாவின் ரோகித் 5வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை ('ரேங்கிங்') பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் விராத் கோலி, 747 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருந்து 'நம்பர்-4' இடத்துக்கு முன்னேறினார். துபாயில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் 84 ரன் விளாசினார் கோலி.
சாம்பியன்ஸ் டிராபியில் பெரிய அளவில் சோபிக்காத இந்திய கேப்டன் ரோகித் சர்மா (745 புள்ளி) 3வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்திய துணை கேப்டன் சுப்மன் கில் (791) 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு இந்திய வீரர் ஸ்ரேயாஸ் (702), 9வது இடத்தில் இருந்து 8வது இடத்துக்கு முன்னேறினார். தென் ஆப்ரிக்காவின் கிளாசன் (760) 3வது இடத்துக்கு முன்னேறினார். பாகிஸ்தானின் பாபர் ஆசம் (770) 2வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
பவுலர் தரவரிசையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் சோபிக்காத இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் (637), 3வது இடத்தில் இருந்து 6வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இப்போட்டியில் 3 விக்கெட் சாய்த்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி (609), 14வது இடத்தில் இருந்து 11வது இடத்துக்கு முன்னேறினார்.
'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (213 புள்ளி) 9வது இடத்தில் நீடிக்கிறார். ஆப்கானிஸ்தானின் அஸ்மதுல்லா ஓமர்சாய் (296), 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார்.