/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதல்: 'டி-20' உலக கோப்பை அரையிறுதியில்
/
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதல்: 'டி-20' உலக கோப்பை அரையிறுதியில்
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதல்: 'டி-20' உலக கோப்பை அரையிறுதியில்
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதல்: 'டி-20' உலக கோப்பை அரையிறுதியில்
UPDATED : மார் 01, 2026 11:47 PM
ADDED : பிப் 28, 2026 11:11 PM

கொல்கட்டா: 'டி-20' உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்தியா,
இலங்கையில் 'டி-20' உலக கோப்பை 10வது சீசன் நடக்கிறது. 'சூப்பர்-8'
சுற்றின் முடிவில், பிரிவு-1ல் தென் ஆப்ரிக்கா (6 புள்ளி), இந்தியா (4),
பிரிவு-2ல் இங்கிலாந்து (6 புள்ளி), நியூசிலாந்து (3 ) அணிகள்
அரையிறுதிக்கு முன்னேறின.
கொல்கட்டாவில், வரும்
மார்ச் 4ல் நடக்கவுள்ள முதல் அரையிறுதியில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து
அணிகள் மோதுகின்றன. மும்பை, வான்கடே மைதானத்தில் மார்ச் 5ல் நடக்கவுள்ள
2வது அரையிறுதியில் 'நடப்பு சாம்பியன்' இந்திய அணி, இங்கிலாந்தை
எதிர்கொள்கிறது.
இதில் வெற்றி பெறும் அணிகள், வரும் மார்ச் 8ல் ஆமதாபாத்தில் நடக்கவுள்ள பைனலில் விளையாடும்.
ஆறாவது முறை
'டி-20'
உலக கோப்பை அரங்கில் அதிக முறை (6) அரையிறுதிக்கு முன்னேறிய அணிகளுக்கான
பட்டியலில் முதலிடத்தை இங்கிலாந்து (2010, 2016, 2021, 2022, 2024, 2026),
பாகிஸ்தானுடன் (2007, 2009, 2010, 2012, 2021, 2022) பகிர்ந்து கொண்டது
இந்தியா (2007, 2014, 2016, 2022, 2024, 2026).

