sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

பூரனுக்கு 'யெஸ்'...ராகுலுக்கு 'நோ': லக்னோ அணியில்

/

பூரனுக்கு 'யெஸ்'...ராகுலுக்கு 'நோ': லக்னோ அணியில்

பூரனுக்கு 'யெஸ்'...ராகுலுக்கு 'நோ': லக்னோ அணியில்

பூரனுக்கு 'யெஸ்'...ராகுலுக்கு 'நோ': லக்னோ அணியில்


ADDED : அக் 28, 2024 10:51 PM

Google News

ADDED : அக் 28, 2024 10:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: ஐ.பி.எல்., லக்னோ அணியில் இருந்து ராகுல் விடுவிக்கப்படுகிறார். நிகோலஸ் பூரன் தக்க வைக்கப்பட உள்ளார்.

ஐ.பி.எல்., தொடரின் 18வது சீசன், 2025ல் நடக்க உள்ளது. இதற்கான வீரர்கள் 'மெகா' ஏலம் அடுத்த மாதம் நடக்க இருக்கிறது. ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைக்கலாம்.

தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை அக். 31 மாலை 5 மணிக்குள் பி.சி.சி.ஐ., வசம் அளிக்க வேண்டும். நிர்வாகத்துடன் உரசல் ஏற்பட்டதால், லக்னோ அணியில் இருந்து ராகுல் விடுவிக்கப்படுகிறார். இவருக்கு பதில் வெஸ்ட் இண்டீசின் பூரன் கேப்டனாக நியமிக்கப்படலாம். பூரன், மயங்க் யாதவ், பிஷ்னோய் தக்கவைக்கப்படலாம். 'அன்கேப்ட்' வீரர்களாக படோனி, மொசின் கான் இடம் பெறுவர். கடைசி நேரத்தில் ராகுலை ஒப்பந்தம் செய்ய விருப்பப்பட்டால், 'ரைட் டு மேட்ச் கார்டை' பயன்படுத்தி வாங்கலாம்.

சமீபத்திய கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் 504 ரன் குவித்த பூரன் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசுகிறது. இவரை 2017ல் மும்பை அணி ரூ. 30 லட்சத்திற்கு வாங்கியது. 2019ல் பஞ்சாப் அணி ரூ 4.2 கோடிக்கு வாங்கியது. 2022ல் ஐதராபாத் அணி ரூ. 10.75 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. பின் 2023ல் லக்னோ அணி பூரனுக்கு ரூ.16 கோடி கொடுத்தது. தற்போது தக்கவைக்கப்பட இருப்பதால், இவரது ஒப்பந்த தொகை ரூ. 18 கோடியாக உயர உள்ளது.

'தல' தோனி எப்படி

சென்னை அணியில் கேப்டன் ருதுராஜ், ஷிவம் துபே, ரவிந்திர ஜடேஜா, பதிரானா தக்க வைக்கப்பட உள்ளனர். தோனி தொடர்ந்து விளையாட விருப்பமாக உள்ளார். 'அன்கேப்ட்' வீரராக இடம் பெறுவார். புதிய விதிப்படி இந்திய அணிக்காக 5 ஆண்டுகள் விளையாடாத, பி.சி.சி.ஐ., சம்பள ஒப்பந்தத்தில் இடம் பெறாத ஓய்வு பெற்ற வீரர்களும் 'அன்கேப்ட்' வீரர்களாக கருதப்படுவர். தோனி கடைசியாக 2019ல் இந்திய அணிக்கு விளையாடினார். இதனால் இவரை ஒப்பந்தம் செய்வதில் பிரச்னை இருக்காது. 'அன்கேப்ட்' வீரர் என்பதால் ரூ. 4 கோடி தான் சம்பளம் கிடைக்கும்.








      Dinamalar
      Follow us