sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கால்பந்து

/

சவுத்தர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் சாம்பியன் * லெஜண்டு லீக் கிரிக்கெட்டில்

/

சவுத்தர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் சாம்பியன் * லெஜண்டு லீக் கிரிக்கெட்டில்

சவுத்தர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் சாம்பியன் * லெஜண்டு லீக் கிரிக்கெட்டில்

சவுத்தர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் சாம்பியன் * லெஜண்டு லீக் கிரிக்கெட்டில்


UPDATED : அக் 17, 2024 10:03 PM

ADDED : அக் 16, 2024 10:51 PM

Google News

UPDATED : அக் 17, 2024 10:03 PM ADDED : அக் 16, 2024 10:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: லெஜண்டு லீக் கிரிக்கெட் தொடரில் கேதர் ஜாதவின் சவுத்தர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி சாம்பியன் ஆனது. பைனலில் சூப்பர் ஓவரில் ஒடிசா அணியை வீழ்த்தியது.

இந்தியாவில் லெஜண்டு லீக் 'டி-20' கிரிக்கெட் தொடர் நடந்தது. ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் பங்கேற்றனர். ஸ்ரீநகரில் நடந்த பைனலில் கேதர் ஜாதவின் சவுத்தர்ன் சூப்பர் ஸ்டார்ஸ், இர்பான் பதானின் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்கு கப்டில் (27), மசகட்சா (83) கைகொடுக்க, 20 ஓவரில் 164/6 ரன் எடுத்தது. முனவீரா 4 விக்கெட் சாய்த்தார். பின் களமிறங்கிய ஒடிசா அணிக்கு யூசுப் பதான் (85) விளாச, 20 ஓவரில் 164/9 ரன் எடுத்தது. போட்டி 'டை' ஆனது.

வெற்றியாளரை முடிவு செய்ய சூப்பர் ஓவர் நடந்தது. முதலில் களமிறங்கிய ஒடிசா அணி, ஒரு ஓவரல் 13 ரன் எடுத்தது. இலக்கைத் துரத்திய சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்கு கப்டில் 2 சிக்சர் விளாச, 0.5 ஓவரில் 14/1 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற சூப்பர் ஸ்டார்ஸ் அணி, சாம்பியன் ஆனது.

37 ஆண்டுக்குப் பின்... ஸ்ரீநகரில்

ஸ்ரீநகரில் கடைசியாக 1987ல் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடந்தது. 37 ஆண்டுக்குப் பின் மீண்டும் லெஜண்டு லீக் கிரிக்கெட் பைனல் இங்குள்ள பக் ஷி மைதானத்தில் நடந்தது. மொத்தம் 28,000 பேர் திரள, மைதானம் நிரம்பி வழிந்தது.






      Dinamalar
      Follow us