ADDED : டிச 05, 2025 11:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படோர்டா: கோவாவில் சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் 44வது சீசன் நடக்கின்றன. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன.
படோர்டாவில் நடந்த முதல் அரையிறுதியில் ஈஸ்ட் பெங்கால் அணி 3-1 என பஞ்சாப்பை வென்றது.
இரண்டாவது அரையிறுதியில் கோவா-மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கோவா அணிக்கு பிரிசன் (20 வது நிமிடம்), திமோர் (23) தலா ஒரு கோல் அடித்து கை கொடுத்தனர்.
மும்பை சார்பில் பிரண்டன் மட்டும் (59) ஒரு கோல் அடித்தார்.
முடிவில் கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. இதில் நாளை ஈஸ்ட் பெங்காலை சந்திக்கிறது.

