/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
நேஷன்ஸ் கால்பந்து... களமிறங்கும் இந்தியா
/
நேஷன்ஸ் கால்பந்து... களமிறங்கும் இந்தியா
ADDED : ஜூலை 29, 2025 10:49 PM

புதுடில்லி: மத்திய ஆசிய கால்பந்து சங்கத்தின் (சி.ஏ.எப்.ஏ.,) சார்பில் 'நேஷன்ஸ்' கோப்பை தொடர், வரும் ஆகஸ்ட் 28-செப்டம்பர் 8ல் தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தானில் நடக்க உள்ளது.
மொத்தம் 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கும். முடிவில் முதலிடம் பிடிக்கும் அணிகள் பைனலுக்கு முன்னேறும். இரு பிரிவிலும் இரண்டாவது இடம் பெறும் அணிகள், மூன்றாவது இடத்துக்கான போட்டியில் மோதும். இவை செப்டம்பர் 8ல் நடக்கும்.
இத்தொடரில் 'பி' பிரிவில் இடம் பெற்ற மலேசிய அணி, சர்வதேச அட்டவணை காரணமாக விலகிக் கொண்டது. இதையடுத்து சிறப்பு அழைப்பின் பேரில் தரவரிசையில் 133 வது இடத்தில் உள்ள இந்திய அணி பங்கேற்க உள்ளது. முதல் போட்டியில் ஆக. 29ல் இந்திய அணி தஜிகிஸ்தான், அடுத்து செப். 1ல் வலிமையான ஈரான் (20 வது இடம்), செப். 4ல் ஆப்கானிஸ்தானுடன் மோத உள்ளது.
ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடர் எப்போது துவங்கும் எனத் தெரியாத நிலையில் இந்திய அணி வீரர்களுக்கு இத்தொடர் வரப் பிரசாதமாக அமைந்துள்ளது. உலகின் முன்னணி அணிகளின் சவால், நெருக்கடிக்கு ஏற்ப தங்களை தயார் படுத்திக் கொள்ளலாம். இதனால், ஆசிய கோப்பை தகுதிச்சுற்றில், சிங்கப்பூர் அணிக்கு எதிராக சிறப்பாக செயல்படலாம்.