ADDED : மே 09, 2024 10:53 PM

புதுடில்லி: பெண்களுக்கான தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் மணிப்பூர் அணி 3-0 என ஒடிசாவை வீழ்த்தியது.
இந்தியாவில் சீனியர் பெண்களுக்கான 28 வது தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இரண்டாவது கட்ட பைனல் சுற்றில் 12 அணிகள், இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். நேற்று நடந்த 'பி' பிரிவு போட்டியில் மணிப்பூர், ஒடிசா மோதின. இதில் மணிப்பூர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மணிப்பூர் சார்பில் பாலா தேவி, 17 வது, 66 வது நிமிடங்களில் கோல் அடித்தார். கிரேஸ் (26 வது) தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார்.
மற்றொரு போட்டியில் ஹரியானா அணி 3-0 என மஹாராஷ்டிராவை வீழ்த்தியது. சிக்கிம் அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜார்க்கண்ட் அணியை சாய்த்தது. இதுவரை நடந்த போட்டியின் முடிவில் மணிப்பூர் அணி (12 புள்ளி), ஹரியானா (10) அணிகள் முதல் இரு இடத்தில் உள்ளன.