ADDED : மே 23, 2024 10:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மணிலா: ஆசிய வாலிபால் தொடரில் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்றது.
பிலிப்பைன்சில் ஆசிய வாலிபால் சாலஞ்ச் கோப்பை தொடர் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டி லீக் முறையில் நடக்கின்றன.
இந்திய அணி 'ஏ' பிரிவில் ஈரான், பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, சீன தைபேவுடன் இடம் பெற்றுள்ளது. உலகத் தரவரிசையில் 62 வது இடத்திலுள்ள இந்தியா முதல் போட்டியில், ஈரானை வென்றது.
நேற்று தனது இரண்டாவது போட்டியில் 46வது இடத்திலுள்ள சீன தைபே அணியை சந்தித்தது. முதல் செட்டை இந்தியா 25-19 என கைப்பற்றியது. இரண்டாவது செட்டை 25-13 என வசப்படுத்தியது. மூன்றாவது செட்டையும் 25-16 என வென்றது.
முடிவில் இந்திய அணி 3-0 என்ற செட் கணக்கில் இத்தொடரில் இரண்டாவது வெற்றி பெற்றது.

