ADDED : ஏப் 27, 2026 11:23 PM

சான்யா: ஆசிய பீச் விளையாட்டு கபடியில் இந்திய பெண்கள் அணி தங்கப்பதக்கம் கைப்பற்றியது.
சீனாவின் சான்யா நகரில், ஆசிய பீச் விளையாட்டு 6வது சீசன் நடக்கிறது. இதில் 45 நாடுகளில் இருந்து, 1790 பேர் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 4 போட்டிகளில், 18 வீரர், 13 வீராங்கனைகள் என, 33 பேர் பங்கேற்றுள்ளனர்.
பெண்களுக்கான கபடியில் 'ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, 2 லீக் போட்டியிலும் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் 50-31 என வங்கதேசத்தை வீழ்த்தியது.
நேற்று நடந்த பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. முதல் பாதியில் 20-18 என இந்தியா முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் சிறப்பாக செயல்பட்டது இந்தியா (27-13). முடிவில் இந்திய அணி, 47-31 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் கைப்பற்றியது. ஆசிய பீச் கபடியில் இந்திய பெண்கள் அணி, தொடர்ச்சியாக வென்ற 6வது தங்கம் இது.
ஆண்கள் 'வெள்ளி'
ஆண்களுக்கான கபடி அரையிறுதியில் இந்தியா 50-28 என பாகிஸ்தானை வென்றது.
நேற்று நடந்த பைனலில் இந்தியா, ஈரான் மோதின. முதல் பாதியில் இந்தியா 11-23 என பின்தங்கியது இந்தியா. இரண்டாவது பாதியில் இந்தியா (20-21) மீண்டு வந்த போதும் வெற்றிக்கு போதவில்லை. முடிவில் இந்தியா 31-44 என தோற்று, வெள்ளி கைப்பற்றியது.
