/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பாட்மின்டன்: உன்னதி ஏமாற்றம்
/
பாட்மின்டன்: உன்னதி ஏமாற்றம்
ADDED : பிப் 23, 2025 07:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் உன்னதி ஹூடா தோல்வியடைந்தார்.
சிங்கப்பூரில், சர்வதேச சேலஞ்ச் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் உன்னதி ஹூடா, இந்தோனேஷியாவின் ருசானா மோதினர். முதல் செட்டை 17-21 என இழந்த உன்னதி, இரண்டாவது செட்டை 16-21 எனக் கோட்டைவிட்டார். மொத்தம் 42 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் உன்னதி ஹூடா 0-2 (17-21, 16-21) என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.
மற்றொரு இந்திய வீராங்கனை தேவிகா சிஹாக், காலிறுதியோடு திரும்பினார்.

