/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
குத்துச்சண்டை: காலிறுதியில் ஜாஸ்மின்
/
குத்துச்சண்டை: காலிறுதியில் ஜாஸ்மின்
ADDED : செப் 08, 2025 10:44 PM

லிவர்பூல்: இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில், உலக குத்துசண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் 20 பேர் உட்பட, 65 நாடுகளில் இருந்து, 550 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.
பெண்களுக்கான 57 கிலோ எடைப் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் ஜாஸ்மின், பிரேசிலின் ஜூசிலென் செர்குயராவை எதிர்கொண்டார். இதில் ஜாஸ்மின் 5-0 என்ற கணக்கில் ஒருமனதாக வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். இன்னும் ஒரு வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறும் பட்சத்தில், உலக சாம்பியன்ஷிப்பில் தனது முதல் பதக்கத்தை உறுதி செய்யலாம்.
54 கிலோ பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்திய வீராங்கனை சாக் சி சவுத்ரி, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற, முன்னாள் உலக சாம்பியன், துருக்கியின் ஹாடிஸ் அக்பசை சந்தித்தார். இதில் சாக் சி, 0-5 என தோல்வியடைந்தார்.