/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
கனடா ஓபன் ஸ்குவாஷ்: அரையிறுதியில் அனாஹத்
/
கனடா ஓபன் ஸ்குவாஷ்: அரையிறுதியில் அனாஹத்
ADDED : அக் 29, 2025 10:10 PM

டொரான்டோ: கனடா ஓபன் ஸ்குவாஷ் அரையிறுதிக்கு இந்திய வீராங்கனை அனாஹத் சிங் முன்னேறினார்.
கனடாவில், பெண்களுக்கான சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன் காலிறுதியில், உலகின் 'நம்பர்-43' இந்தியாவின் அனாஹத் சிங் 17, 'நடப்பு சாம்பியன்', உலகின் 'நம்பர்-7' பெல்ஜியத்தின் டின்னே கிலிஸ் 27, மோதினர்.
மொத்தம் 36 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய அனாஹத் 3-0 (12-10, 11-9, 11-9) என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இதன்மூலம் அனாஹத், முதன்முறையாக 'டாப்-10' தரவரிசையில் இடம் பெற்றுள்ள வீராங்கனையை வீழ்த்தினார்.
அரையிறுதியில் அனாஹத், உலகின் 'நம்பர்-10' இங்கிலாந்தின் ஜினா கென்னடியை எதிர்கொள்கிறார்.

