sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

ஆனந்தை வென்றார் பிரக்ஞானந்தா * செஸ் மாஸ்டர்ஸ் தொடரில் அபாரம்

/

ஆனந்தை வென்றார் பிரக்ஞானந்தா * செஸ் மாஸ்டர்ஸ் தொடரில் அபாரம்

ஆனந்தை வென்றார் பிரக்ஞானந்தா * செஸ் மாஸ்டர்ஸ் தொடரில் அபாரம்

ஆனந்தை வென்றார் பிரக்ஞானந்தா * செஸ் மாஸ்டர்ஸ் தொடரில் அபாரம்

1


ADDED : அக் 16, 2024 10:48 PM

Google News

ADDED : அக் 16, 2024 10:48 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன்: செஸ் மாஸ்டர்ஸ் தொடரின் காலிறுதியில் பிரக்ஞானந்தா, ஆனந்தை வீழ்த்தினார்.

இங்கிலாந்தின் லண்டனில் செஸ் மாஸ்டர்ஸ் தொடர் நடக்கிறது. இதன் காலிறுதியில் ஐந்து முறை உலக சாம்பியன் ஆன இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், சக வீரர் பிரக்ஞானந்தா மோதினர். கடைசியாக 2018ல் கோல்கட்டாவில் நடந்த போட்டியில் இருவரும் மோதினர். தவிர ஆனந்த் பயிற்சியில் வளர்ந்த பிரக்ஞானந்தா, தற்போது 6 ஆண்டுக்குப் பின் மீண்டும் அவருடன் மோதியதால் எதிர்பார்ப்பு எகிறியது.

காலிறுதியில் முதல் இரு போட்டியும் 'டிரா' ஆக, ஸ்கோர் 1.0-1.0- என சமனில் முடிந்தது. இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி 'டைபிரேக்கருக்கு' சென்றது. இதில் ஆனந்த், கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினர். துவக்கத்தில் இருந்தே பிரக்ஞானந்தா ஆதிக்கம் செலுத்தினார்.

22வது நகர்த்தலில் ஆனந்த் தவறு செய்தார். இதைச் சரியாக பயன்படுத்திய பிரக்ஞானந்தா, 26 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதையடுத்து 2.0-1.0 என வென்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.

அர்ஜுன் வெற்றி

இதில் பிரக்ஞானந்தா சக வீரர் அர்ஜுன் எரிகைசியுடன் மோதுகிறார். முதல் போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் அர்ஜுன். இப்போட்டியில் பிரக்ஞானந்தா, 70 வது நகர்த்தலில் தோல்வியடைய, 0-1 என பின்தங்கினார்.






      Dinamalar
      Follow us