/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
சிப்ட் கவுர் மீண்டும் முதலிடம்: துப்பாக்கி சுடுதல் தகுதி போட்டியில்
/
சிப்ட் கவுர் மீண்டும் முதலிடம்: துப்பாக்கி சுடுதல் தகுதி போட்டியில்
சிப்ட் கவுர் மீண்டும் முதலிடம்: துப்பாக்கி சுடுதல் தகுதி போட்டியில்
சிப்ட் கவுர் மீண்டும் முதலிடம்: துப்பாக்கி சுடுதல் தகுதி போட்டியில்
ADDED : ஏப் 26, 2024 11:14 PM

புதுடில்லி: ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் தகுதி போட்டியில் சிப்ட் கவுர் சாம்ரா மீண்டும் முதலிடம் பிடித்தார்.
பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பங்கேற்க, இந்திய நட்சத்திரங்களுக்கான தகுதி போட்டி டில்லியில் நடக்கிறது. நேற்று, 50 மீ., 'ரைபிள்--3 பொஷிஷன்' பிரிவு 2வது சுற்று நடந்தது. பெண்களுக்கான பைனலில் சிப்ட் கவுர் சாம்ரா 465.1 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இவர், முதல் சுற்றிலும் முதலிடம் பிடித்திருந்தார். அடுத்த இரு இடங்களை ஆஷி சோக்சி, அஞ்சும் கைப்பற்றினர்.
ஆண்களுக்கான 50 மீ., 'ரைபிள்--3 பொஷிஷன்' பிரிவு 2வது சுற்று பைனலில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 436.6 புள்ளிகளுடன் முதலிடத்தை தட்டிச் சென்றார். இவர், முதல் சுற்றில் 3வது இடம் பிடித்திருந்தார். முதல் சுற்றில் 5வது இடம் பிடித்த அகில் ஷியோரன் (436.5 புள்ளி) 2வது இடத்தை கைப்பற்றினார்.
இப்பிரிவின் அடுத்த இரு சுற்று போட்டிகள் அடுத்த மாதம் போபாலில் நடக்கவுள்ளன.

