/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தீக் ஷா மூன்றாவது இடம் * ஐரோப்பிய கோல்ப் தொடரில்
/
தீக் ஷா மூன்றாவது இடம் * ஐரோப்பிய கோல்ப் தொடரில்
ADDED : ஏப் 22, 2024 10:50 PM

ஜோகனஸ்பர்க்: ஐரோப்பிய கோல்ப் தொடரில் இந்தியாவின் தீக் ஷா தாகர் மூன்றாவது இடம் பிடித்தார்.
தென் ஆப்ரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் பெண்களுக்கான ஐரோப்பிய கோல்ப் தொடர் நடந்தது. உலகத் தரவரிசையில் 147 வது இடத்திலுள்ள இந்தியாவின் தீக் ஷா தாகர், திவேஷா மாலிக், வாணி கபூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதல் சுற்றில் 73 'ஸ்டிரோக்' பெற்ற தீக் ஷா, அடுத்த இரு சுற்றில் சிறப்பாக செயல்பட்டு 71, 69 'ஸ்டிரோக்' பெற்றார்.
நான்காவது, கடைசி சுற்றில் 70 'ஸ்டிரோக்' பெற்றார். ஒட்டுமொத்தமாக 283 'ஸ்டிரோக்' பெற்ற தீக் ஷா, மூன்றாவது இடம் பிடித்தார். 2024ல் இது, இவரது சிறப்பான ஆட்டமாக அமைந்தது.
சுவிட்சர்லாந்தின் தம்பர்லினி சியாரா (275), தாய்லாந்தின் உடாமா ஆன்சிஷா (282) முதல் இடம் பிடித்தனர். இந்தியாவின் திவேஷா மாலிக் (292 'ஸ்டிரோக்') 29 வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றொரு இந்திய வீராங்கனை வானி கபூர் (295 'ஸ்டிரோக்') 41வது இடம் பிடித்தார்.

