/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஜெர்மன் ஸ்குவாஷ்: காலிறுதியில் செந்தில்குமார்
/
ஜெர்மன் ஸ்குவாஷ்: காலிறுதியில் செந்தில்குமார்
ADDED : ஏப் 05, 2024 10:16 PM

ஹம்பர்க்: ஜெர்மனி ஓபன் ஸ்குவாஷ் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் முன்னேறினார்.
ஜெர்மனியில் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன் முதல் சுற்றில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் 3-2 (6-11, 7-11, 11-6, 11-3, 11-9) என எகிப்தின் யாசின் எல்ஷாபியை வீழ்த்தினார். இரண்டாவது சுற்றில் செந்தில்குமார், இங்கிலாந்தின் ஜார்ஜ் பார்க்கர் மோதினர். முதலிரண்டு செட்களை 11-5, 11-8 எனக் கைப்பற்றிய செந்தில்குமார், மூன்றாவது செட்டை 9-11 என இழந்தார். நான்காவது செட்டில் எழுச்சி கண்ட இவர் 11-9 என வென்றார்.
ஒரு மணி நேரம், ஒரு நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் வேலவன் செந்தில்குமார் 3-1 (11-5, 11-8, 9-11, 11-9) என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். இதில் செந்தில்குமார், மலேசியாவின் ஈன் யோவ் என்ஜியை எதிர்கொள்கிறார்.

