sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

எழுச்சி பெறுமா இந்திய ஹாக்கி * முன்னாள் கேப்டன் சர்தார் சிங் கணிப்பு

/

எழுச்சி பெறுமா இந்திய ஹாக்கி * முன்னாள் கேப்டன் சர்தார் சிங் கணிப்பு

எழுச்சி பெறுமா இந்திய ஹாக்கி * முன்னாள் கேப்டன் சர்தார் சிங் கணிப்பு

எழுச்சி பெறுமா இந்திய ஹாக்கி * முன்னாள் கேப்டன் சர்தார் சிங் கணிப்பு


ADDED : அக் 11, 2024 10:48 PM

Google News

ADDED : அக் 11, 2024 10:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ''எச்.ஐ.எல்., தொடர் காரணமாக இந்தியாவில் ஹாக்கி விளையாட்டு எழுச்சி பெறும்,'' என சர்தார் சிங் தெரிவித்துள்ளார்.

ஹாக்கி இந்தியா அமைப்பு (எச்.ஐ.,) சார்பில் ஐ.பி.எல்., பாணியில் ஹாக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.,) தொடர் கடந்த 2013ல் துவக்கப்பட்டது. 2017க்குப் இத்தொடர் நடக்கவில்லை. ஏழு ஆண்டுகளுக்கு பின், இதன் ஆறாவது சீசன், வரும் டிச. 28- 2025, பிப் 1 வரை நடக்கவுள்ளது.

ஆண்கள் பிரிவில் 8 அணிகள் களமிறங்குகின்றன. முதன் முறையாக பெண்களுக்கான தொடரும் நடத்தப்படுகிறது. இதற்கான வீரர், வீராங்கனைகள் ஏலம் வரும் அக். 13-15ல் நடக்கிறது. இதில் 1000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதுகுறித்து இந்திய அணி முன்னாள் கேப்டன் சர்தார் சிங் 38, கூறியது:

ஹாக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.,) தொடர் இம்முறை பெரியளவில், சிறப்பாக நடக்கவுள்ளது. முதன் முறையாக பெண்களுக்கான போட்டியும் சேர்க்கப்பட்டுள்ளது. இத்தொடர் காரணமாக இந்தியாவில் ஹாக்கியின் பொற்காலம் மீண்டும் எழுச்சி பெறும். அதிக வீரர்கள் பங்கேற்பதால் சிறந்த அனுபவம் பெறலாம், அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

ஏனெனில் உலகத் தரம் வாய்ந்த வீரர்களுடன் இணைந்து, அல்லது அவர்களுக்கு எதிராக விளையாடலாம். இதனால் இந்திய அணிக்கு திறமையான வீரர்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

தற்போதுள்ள முன்னணி வீரர்கள் ஹர்மன்பிரீத் சிங், மன்தீப் சிங், சுமித் உள்ளிட்டோர், எச்.ஐ.எல்., தொடரில் தான் கண்டறியப்பட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us