/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்திய அணி 'முதல்' வெற்றி * புரோ லீக் ஹாக்கி தொடரில்...
/
இந்திய அணி 'முதல்' வெற்றி * புரோ லீக் ஹாக்கி தொடரில்...
இந்திய அணி 'முதல்' வெற்றி * புரோ லீக் ஹாக்கி தொடரில்...
இந்திய அணி 'முதல்' வெற்றி * புரோ லீக் ஹாக்கி தொடரில்...
ADDED : பிப் 25, 2026 10:59 PM

ஹோபர்ட்: புரோ லீக் ஹாக்கி தொடரின் நடப்பு சீசனில் முதல் வெற்றி பெற்றது இந்தியா. நேற்று 'பெனால்டி ஷூட் அவுட்டில்' ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் புரோ லீக் தொடர், 7வது சீசன் நடத்தப்படுகிறது. 9 அணிகள் பங்கேற்கின்றன. இதன் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி, ஸ்பெயின், ஆஸ்திரேலியா அணிகளுடன் தலா 2 போட்டியில் பங்கேற்றது. நேற்று நான்காவது, கடைசி போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதின.
49 வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஹேவார்டு ஒரு கோல் அடித்தார். அடுத்த 2வது நிமிடம், இந்தியாவின் ஷிலானந்த் லக்ரா (51) கோல் அடிக்க, போட்டி 1-1 என சமன் ஆனது.
வெற்றியாளரை முடிவு செய்ய 'பெனால்டி ஷூட்' நடந்தது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்பு தரப்பட்டன. முதல் 4 வாய்ப்பில் இந்தியாவின் லக்ரா, மணிந்தர், விஷ்ணுகாந்த் கோல் அடித்தனர். அபிஷேக் வாய்ப்பை வீணடித்தார். மறுபக்கம் ஆஸ்திரேலிய தரப்பில் ஹேவார்டு மட்டும் கோல் அடித்தார். இதையடுத்து, இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
நடப்பு சீசனில் முதல் 7 போட்டியில் தோற்ற இந்திய அணி, நேற்று முதன் முறையாக வெற்றி பெற்றது. 8 போட்டியில் 4 புள்ளியுடன், பட்டியலில் 8வது இடத்தில் நீடிக்கிறது.

