UPDATED : அக் 15, 2025 10:42 PM
ADDED : அக் 15, 2025 10:40 PM

புதுடில்லி: புரோ கபடி லீக் போட்டியில், 'டை பிரேக்கரில்' அசத்திய பெங்கால் அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் நடக்கிறது. தமிழ் தலைவாஸ், 'நடப்பு சாம்பியன்' ஹரியானா, மும்பை உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன.
டில்லியில் நடந்த லீக் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ், பெங்கால் அணிகள் மோதின. தெலுங்கு டைட்டன்ஸ் வீரர்களை இரு முறை 'ஆல்-அவுட்' செய்த டில்லி அணி, முதல் பாதி முடிவில் 28-17 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு 28 புள்ளி கிடைத்தது. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 45-45 என சமநிலையில் இருந்தது.
அடுத்து நடந்த 'டை பிரேக்கரில்' அசத்திய பெங்கால் அணி 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பெங்கால் அணிக்கு கேப்டன் தேவங்க் (18 புள்ளி), மஞ்ஜீத் (7) கைகொடுத்தார். தெலுங்கு டைட்டன்ஸ் அணி சார்பில் பாரத் 16 புள்ளி பெற்றார்.
மற்றொரு லீக் போட்டியில் புனே அணி 57-33 என ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தியது.