ADDED : அக் 06, 2025 10:59 PM

சென்னை: புரோ கபடி லீக் போட்டியில் அசத்திய டில்லி அணி, ஜெய்ப்பூரை வீழ்த்தியது.
இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் நடக்கிறது. இதில் தமிழ் தலைவாஸ், 'நடப்பு சாம்பியன்' ஹரியானா, பெங்களூரு உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன.
சென்னையில் நடந்த லீக் போட்டியில் ஜெய்ப்பூர், டில்லி அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் ஜெய்ப்பூர் அணி 13-12 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட டில்லி அணியினர், ஜெய்ப்பூர் வீரர்களை 'ஆல்-அவுட்' செய்தனர். ஆட்ட நேர முடிவில் டில்லி அணி 29-26 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
டில்லி அணிக்கு கேப்டன் அஷு மாலிக் (8 புள்ளி), சந்தீப் (7) கைகொடுத்தனர். இதுவரை விளையாடிய 11 போட்டியில், 10 வெற்றி, ஒரு தோல்வி என 20 புள்ளிகளுடன் டில்லி அணி முதலிடத்தில் நீடிக்கிறது. ஆறாவது தோல்வியை பெற்ற ஜெய்ப்பூர் அணி (12 புள்ளி) 7வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
மற்றொரு லீக் போட்டியில் உ.பி., அணி 28-36 என பாட்னாவிடம் தோல்வியடைந்தது.