ADDED : மே 28, 2024 10:57 PM

ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் தொடரின் முதல் சுற்றில் வெற்றி பெற்றார் பிரக்ஞானந்தா.
நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. ஐந்து முறை உலக சாம்பியன் கார்ல்சன் (நார்வே), நடப்பு உலக சாம்பியன் டிங் லிரென் (சீனா), இந்தியாவின் பிரக்ஞானந்தா உட்பட 6 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு சுற்றிலும் இரு முறை மோத வேண்டும்.
நேற்று நடந்த முதல் சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, பிரான்சின் அலிரேசா 'கிளாசிக்கல்' முறையில் மோதினர். இப்போட்டி 44வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. அடுத்து கட்டாய வெற்றி பெற வேண்டிய நிலையில் 'ஆர்மேஜ்டன்' முறையில் மோதினார். இம்முறை சிறப்பாக செயல்பட்ட பிரக்ஞானந்தா, 38 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
முதல் சுற்று முடிவில் பிரக்ஞானந்தா, கார்ல்சன், அமெரிக்காவின் நகமுரா, தலா 1.5 புள்ளி பெற்றனர்.
பெண்களுக்கான பிரிவில் இந்தியாவின் வைஷாலி, ஹம்பி உட்பட 6 பேர் பங்கேற்கின்றனர். முதல் சுற்றில் வைஷாலி, சீனாவின் வென்ஜுனிடம் தோல்வியடைந்தார். ஹம்பி, சுவீடனின் கிராம்லிங்கை வென்றார்.

