/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
'ஈபிள் டவர்' மீது ஏறிய நபர் கைது
/
'ஈபிள் டவர்' மீது ஏறிய நபர் கைது
ADDED : ஆக 12, 2024 01:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாரிஸ்: 'ஈபிள் டவர்' மீது அத்துமீறி ஏறிய நபர் கைது செய்யப்பட்டார்.
பிரான்சின் பாரிசில் ஒலிம்பிக் நிறைவு விழாவுக்காக அனைவரும் பிசியாக இருந்தனர். நேற்று மதியம், சட்டை அணியாத நபர் ஒருவர், திடீரென 1083 அடி உயரம் கொண்ட ஈபிள் டவர் மீது ஏறினார். கயிறு உள்ளிட்ட எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் அங்கு பொருத்தப்பட்டு இருந்த ஒலிம்பிக் வளையத்தை பிடித்து மேலே ஏறினார்.
இரண்டாவது தளத்தை அடைந்த போது, ஸ்பெஷல் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டார். பிரிட்டனை சேர்ந்த இவர், தொழில்ரீதியில் மரம் ஏறுபவர் எனத் தெரியவந்தது. இவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

