/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பராகு செஸ்: பிரக்ஞானந்தா வெற்றி
/
பராகு செஸ்: பிரக்ஞானந்தா வெற்றி
ADDED : மார் 01, 2025 09:54 PM

பராகு: பராகு செஸ் 3வது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
செக்குடியரசில், பிராகு மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம், நெதர்லாந்தின் அனிஷ் கிரி உள்ளிட்ட 10 பேர் பங்கேற்கின்றனர். இதன் 3வது சுற்றில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, செக்குடியரசின் தாய் டாய் வான் நுயென் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 29வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இது, இம்முறை இவரது முதல் வெற்றியானது.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம், சீனாவின் யி வெய் மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் அசத்திய அரவிந்த், 44வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இது, இவரது 2வது வெற்றியானது.
ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், அமெரிக்காவின் சாமுவேல் ஷாங்க்லேண்ட்டை வீழ்த்தினார். நெதர்லாந்தின் அனிஷ் கிரி, செக்குடியரசின் டேவிட் நவாரா மோதிய 3வது சுற்றுப் போட்டி 'டிரா' ஆனது.
மூன்று சுற்றுகளின் முடிவில் அரவிந்த் சிதம்பரம் 2.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பிரக்ஞானந்தா, வின்சென்ட் கீமர் தலா 2.0 புள்ளிகளுடன் 2வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.