/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
புரோ கபடி: பைனலில் டில்லி-புனே
/
புரோ கபடி: பைனலில் டில்லி-புனே
ADDED : அக் 30, 2025 09:20 PM

புதுடில்லி: புரோ கபடி லீக் பைனலில் டில்லி, புனே அணிகள் மோதுகின்றன.
இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் லீக் சுற்றில் மோதின. முடிவில், 'டாப்-8' இடம் பிடித்த புனே (26 புள்ளி), டில்லி (26), பெங்களூரு (22), தெலுங்கு டைட்டன்ஸ் (20), 'நடப்பு சாம்பியன்' ஹரியானா (20), மும்பை (20), பாட்னா (16), ஜெய்ப்பூர் (16) அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்தன. அடுத்த நான்கு இடங்களை பிடித்த உ.பி., (14), தமிழ் தலைவாஸ் (12), குஜராத் (12), பெங்கால் (12) அணிகள் வெளியேறின.
'பிளே-ஆப்' சுற்றில் அசத்திய டில்லி, புனே அணிகள் பைனலுக்கு முன்னேறின. டில்லியில் பைனல் (அக். 31) நடக்கிறது. இம்முறை இவ்விரு அணிகள் மோதிய 3 போட்டிகளும் 'டிரா'வில் முடிந்தன. பின் 'டை பிரேக்கர்' முறையில் டில்லி 2, புனே ஒரு போட்டியில் வென்றன.
சமீபத்தில் இவ்விரு அணிகள் மோதிய தகுதிச் சுற்று-1 போட்டி 34-34 என 'டிரா' ஆனது. பின் 'டை பிரேக்கரில்' அசத்திய டில்லி அணி 6-4 என வெற்றி பெற்று 3வது முறையாக (2019, 2021-22, 2025) பைனலுக்குள் நுழைந்தது. பின், தகுதிச் சுற்று-2ல் எழுச்சி கண்ட புனே அணி 50-45 என தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 3வது முறையாக (2022, 2023-24, 2025) பைனலுக்கு முன்னேறியது.
பைனலில் வெற்றி பெறும் அணி 2வது முறையாக கோப்பை வெல்லாம்.

