/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
புரோ கபடி: ஜெய்ப்பூர் ஜெயம்
/
புரோ கபடி: ஜெய்ப்பூர் ஜெயம்
ADDED : அக் 20, 2024 09:36 PM

ஐதராபாத்: புரோ கபடி லீக் போட்டியில் ஜெய்ப்பூர் அணி 39-34 என பெங்கால் அணியை வீழ்த்தியது.
இந்தியாவில், புரோ கபடி லீக் 11வது சீசன் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இதன் லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பந்தர்ஸ் அணிகள் மோதின. பெங்கால் அணியினரை 'ஆல்-அவுட்' செய்த ஜெய்ப்பூர் அணி முதல் பாதி முடிவில் 21-18 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய ஜெய்ப்பூர் அணி 18 புள்ளி பெற்றது. முடிவில் ஜெய்ப்பூர் அணி 39-34 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ஜெய்ப்பூர் அணி சார்பில் கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் 15, அபிஷேக் மாலிக் 7 புள்ளி பெற்றனர். பெங்கால் அணிக்கு நிதின் தங்கர் (13 புள்ளி), மனிந்தர் சிங் (8) ஆறுதல் தந்தனர்.