/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
துப்பாக்கி சுடுதல்: பாவேஷ், சிம்ரன்பிரீத் முதலிடம்
/
துப்பாக்கி சுடுதல்: பாவேஷ், சிம்ரன்பிரீத் முதலிடம்
துப்பாக்கி சுடுதல்: பாவேஷ், சிம்ரன்பிரீத் முதலிடம்
துப்பாக்கி சுடுதல்: பாவேஷ், சிம்ரன்பிரீத் முதலிடம்
ADDED : ஏப் 22, 2024 11:10 PM

புதுடில்லி: ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் தகுதி போட்டியில் பாவேஷ், சிம்ரன்பிரீத் கவுர் (25 மீ., 'ரேபிட்-பயர் பிஸ்டல்') முதலிடம் பிடித்தனர்.
டில்லியில், பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பங்கேற்கும், இந்திய நட்சத்திரங்களுக்கான தகுதி போட்டி நடக்கிறது. ஆண்களுக்கான 25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவு பைனலில் பாவேஷ் ஷெகாவத் 34 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். அடுத்த இரு இடங்களை அனிஷ் பன்வாலா (29 புள்ளி), விஜய்வீர் சித்து (22) கைப்பற்றினர். ஆதர்ஷ் சிங் (17), அங்குல் கோயல் (13) முறையே 4, 5வது இடம் பிடித்தனர்.
பெண்களுக்கான 25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவு பைனலில் 37 புள்ளிகளுடன் சிம்ரன்பிரீத் கவுர் பிரார் முதலிடத்தை தட்டிச் சென்றார். அடுத்த இரண்டு இடங்களை மனு பாகர் (35 புள்ளி), ஈஷா சிங் (30) கைப்பற்றினர். நான்காவது, 5வது இடத்தை ரிதம் சங்வான் (24), அபினயா பாட்டீல் (16) பிடித்தனர்.

