/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தங்கம் வென்றார் சிப்ட் கவுர்: உலக துப்பாக்கி சுடுதலில்
/
தங்கம் வென்றார் சிப்ட் கவுர்: உலக துப்பாக்கி சுடுதலில்
தங்கம் வென்றார் சிப்ட் கவுர்: உலக துப்பாக்கி சுடுதலில்
தங்கம் வென்றார் சிப்ட் கவுர்: உலக துப்பாக்கி சுடுதலில்
ADDED : ஏப் 05, 2025 10:30 PM

பியுனஸ் ஏர்ஸ்: உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் தங்கம் வென்றார்.
அர்ஜென்டினாவில், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 50 மீ., 'ரைபிள்-3 பொஷிஷன்ஸ்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் சிப்ட் கவுர் சாம்ரா, 590.35 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தார். மற்ற இந்திய வீராங்கனைகளான மணினி கவுஷிக் (582.25 புள்ளி, 16வது இடம்), ஆஷி (579.28, 21வது), நிஸ்கல் (576.20, 25வது) ஏமாற்றினர். அடுத்து நடந்த பைனலில் அசத்திய சிப்ட் கவுர், 458.6 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
ஆண்களுக்கான 50 மீ., 'ரைபிள்-3 பொஷிஷன்ஸ்' பிரிவு தகுதிச் சுற்றில் அசத்திய இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (589.31 புள்ளி, 2வது இடம்), செயின் சிங் (589.27, 3வது), நிராஜ் குமார் (587.36, 6வது) பைனலுக்குள் நுழைந்தனர். அடுத்து நடந்த பைனலில் செயின் சிங் (443.7 புள்ளி) வெண்கலம் வென்றார். மற்ற இந்திய வீரர்களான ஐஸ்வரி பிரதாப் சிங் (432.6), நிராஜ் குமார் (402.5) முறையே 4, 7 வது இடம் பிடித்தனர்.
பெண்களுக்கான 25 மீ., 'பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் அசத்திய இந்தியாவின் மனு பாகர் (585.19 புள்ளி, 3வது இடம்), ஈஷா சிங் (579.15, 7 வது) பைனலுக்கு முன்னேறினர். இதில் ஈஷா சிங் 35 புள்ளிகளுடன் வெள்ளி வென்றார். மனு பாகர் (20 புள்ளி) 6வது இடம் பிடித்து ஏமாற்றினார்.
இதுவரை இந்தியாவுக்கு ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 3 பதக்கம் கிடைத்துள்ளது.