sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

ஸ்குவாஷ்: காலிறுதியில் அனாஹத்

/

ஸ்குவாஷ்: காலிறுதியில் அனாஹத்

ஸ்குவாஷ்: காலிறுதியில் அனாஹத்

ஸ்குவாஷ்: காலிறுதியில் அனாஹத்


ADDED : ஏப் 17, 2025 07:36 PM

Google News

ADDED : ஏப் 17, 2025 07:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோலாலம்பூர்: உலக ஸ்குவாஷ் தகுதிச் சுற்றின் காலிறுதிக்கு இந்தியாவின் அனாஹத் சிங், வீர் சோத்ரானி முன்னேறினர்.

அமெரிக்காவின் சிகாகோவில், வரும் மே 9-17ல் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதற்கான ஆசிய தகுதிச் சுற்று, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அனாஹத் சிங், பிலிப்பைன்சின் ஜெமிகா அரிபாடோ மோதினர். இதில் அனாஹத் 3-0 (11-4, 11-5, 11-7) என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் தன்வி, ஹாங்காங்கின் கா சிங் செங் மோதினர். இதில் தன்வி 3-1 (11-7, 11-8, 8-11, 12-10) என வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். இந்தியாவின் அகன்க் ஷா சாலுங்கே 3-0 (11-4, 11-3, 11-8) என ஜப்பானின் ரிசா சுகிமோட்டோவை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் வீர் சோத்ரானி, மலேசியாவின் ஆங் சாய் ஹங் மோதினர். இதில் வீர் 3-0 (11-7, 11-8, 14-12) என வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.






      Dinamalar
      Follow us